நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஐப்பசி
சனிக்கிழமை
பெருந்தலைவர் அவர்களை பல்வேறு திரைப்படப் பாடல்களில் புகழ்ந்து எழுதியிருக்கின்றார்கவியரசர் ..
அந்த வகையில் இது தனிப்பாடல் போல் இருக்கின்றது..
ஏழையெனப் பிறந்தவன் தான்
பாண்டி நாட்டிலே - அவன்
ஏழைக்கெல்லாம் கல்வி தந்தான்
பிறந்த நாட்டிலே..
அறிவுக் கண்ணைத் திறந்து வைத்தான் அழகு மொழியிலே - அவன்
அறிஞன் என உயர்ந்து நின்றான்
இமயம் வரையிலே...
இது தான் முழு வடிவமா என்பது தெரியவில்லை..
நன்றி
எங்கள் சமுதாயப் பேரவை
Fb
நல்லோர் புகழ் வாழ்க
**

வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குபதிவு அருமை. பாடல் பொருள் புதைந்தாக நன்றாக உள்ளது. கவிஞர் கண்ணதாசனின் வரிகள் என்றால் கேட்கவா வேண்டும். பெருந்தலைவர் திரு. காமராஜரின் புகழ் என்றும் நிலைத்திருக்கும். பகிர்வுக்கு மிக்க நன்றி
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
தங்கள் வருகையும்
நீக்குஅன்பின் கருத்தும் மகிழ்ச்சி
நன்றியம்மா
நல்லோர் புகழ் வாழ்க
கண்ணதாசன் பாடல் அருமை.
பதிலளிநீக்குஏழைகளுக்கு எல்லாம் அறிவுக் கண்ணை திறந்து வைத்து இமயமலை போல் உயர்ந்து நின்ற பெரும் தலைவரை போற்றுகிறோம்.
தங்கள் அன்பின்
நீக்குவருகையும் கருத்தும் மகிழ்ச்சி
நன்றியம்மா
நல்லோர் புகழ் வாழ்க