நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஆனி 11
ஞாயிற்றுக்கிழமை
ஆனி மாதம் இரண்டாம் நாள்
திங்களன்று (16/6) காலை
தஞ்சை மா நகரில் நடைபெற்ற
இருபத்தைந்து கருட சேவையைத் தொடர்ந்து ராஜ வீதிகளில் செவ்வாயன்று நடைபெற்ற
(பதினைந்து) நவநீத சேவை எனும் வெண்ணெய்த் தாழி உற்சவம்..
கருட சேவையன்றும் நவநீத சேவையன்றும்
ராஜ வீதிகளில் மக்கள் - சித்ரான்னங்கள் மோர் பானகம் முதலானவற்றை வழங்கியும் பட்டறைகளை இழுத்து வருகின்ற மாடுகளுக்கு பழங்கள் கொடுத்தும் நீரில் தீவனங்களைக் கரைத்து வைத்தும் புண்ணியம் தேடிக் கொண்டனர்..
ஓம் ஹரி ஓம்
நம சிவாய ஓம்
**
// ராஜ வீதிகளில் மக்கள் - சித்ரான்னங்கள் மோர் பானகம் முதலானவற்றை வழங்கியும் பட்டறைகளை இழுத்து வருகின்ற மாடுகளுக்கு பழங்கள் கொடுத்தும் நீரில் தீவனங்களைக் கரைத்து வைத்தும் புண்ணியம் தேடிக் கொண்டனர்..//
பதிலளிநீக்குமிகவும் சிறப்பு. ஒரு திருவிழா என்றால், இது மாதிரி காட்சிகள் தான் திருவிழாவை மேலும் சிறப்பாக்கும். I miss நீர்மோர், பானகம்,, புளியோதரை!!
பானகம் பதிவில் உள்ளதே... பெருமாள் கோயில் வைபவத்தில் புளியோதரை இல்லாமலா!...
நீக்குதங்கள் அன்பின் வருகையும் மகிழ்வான
கருத்தும் மகிழ்ச்சி..
நன்றி ஸ்ரீராம்
படங்கள் யாவும் சிறப்பு. வெயிலில் நின்று எடுத்துப் பகிர்ந்துள்ளீர்கள்.
பதிலளிநீக்குதங்கள் அன்பின் வருகையும் மகிழ்வான
நீக்குகருத்தும் நெகிழ்ச்சி..
நன்றி ஸ்ரீராம்
நவநீதசேவை காட்சிகள் கண்டு தரிசித்தோம்.
பதிலளிநீக்குவெண்ணைத் தாழியுடன் பெருமாள் அழகான அலங்காரம்.
ஓம் வெங்கடேசா சரணம்.
தங்கள் அன்பின் வருகையும் மகிழ்வான
நீக்குகருத்தும் மகிழ்ச்சி..
நன்றி மாதேவி
வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குபதிவு அருமை. நவநீத கிருஷ்ணன் படங்கள் அனைத்தும் கண்களுக்கு விருந்து. நவநீத கிருஷ்ணரை தரிசித்துக் கொண்டேன். அனைவருக்கும் உணவுகள் அளித்தும், பசுக்களின் தாகம் தீர்த்தும் திருவிழாவை பக்தியுடன் கொண்டாடிய மக்களுக்கு வாழ்த்துகள். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
தங்கள் அன்பின் வருகையும் மகிழ்வான
நீக்குகருத்தும் மகிழ்ச்சி..
நன்றியம்மா