நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

செவ்வாய், மே 07, 2024

நலம் தேடி..


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
சித்திரை 24
செவ்வாய்க்கிழமை

நம் நாட்டில் தயாரிக்கப்பட்டு ஏற்றுமதி செய்யப்பட்ட சிலவகை மசாலா பொருட்களுக்கு அமெரிக்கா தடை விதித்து உள்ளதாக செய்திகள்..

மாலத்தீவிலும் தடை செய்யப்பட்டிருக்கின்றதாம்..

(இணையத்தில் தேடிக் கண்டு கொள்ளவும்)

காரணம் - 
நோய்த் தொற்று ஏற்படுத்துகின்ற பூச்சிக் கொல்லிகளும் வேறு சில வைரஸ்களும் அதில் காணப்படுவதால் அந்நாட்டின் (US Food and Drug Administration -FDA) உணவுப் பாதுகாப்புத் துறையினரின் இப்படியான நடவடிக்கைகள்..  (கூகிள் செய்தி)

இங்கே ரோட்டுக் கடைகளில் இதெல்லாம் தாராளம்.. அடித்துக் கொண்டு நிற்கின்றார்கள் என்கின்றீர்களா!... 

நமக்கு எதற்குங்க ஊர் வம்பு?..

3D illustration of Salmonella Bacteria
Salmonella is a ubiquitous human and animal pathogen which causes almost a hundred million cases of gastroenteritis each year throughout the world. 

Salmonellosis in humans usually presents as self-limiting food poisoning (gastroenteritis), albeit it can occasionally manifest as a severe systemic infection (enteric fever) that requires swift antibiotic treatment.

Most cases of salmonellosis in humans occur after the consumption of contaminated food products such as poultry meat, pork, beef, eggs, vegetables, juices, and other types of foods. Therefore, prudent use of antimicrobials in human medicine and agriculture is pivotal in minimizing the emergency aspects and spread of resistant Salmonella.

நோய்த் தடுப்பு முறை நிறையவே இருக்குது.. அதப் பற்றி தெரிந்து கொள்வோம் வாங்க..
(நன்றி விக்கி)

சால்மோனெல்லாசிஸ் (salmonellosis) என்பது   சுகாதாரமற்ற உணவுகளால் ஏற்படுகின்றது.. 

பொதுவான அறிகுறிகள்: வயிற்றுப் போக்கு, காய்ச்சல்,  மற்றும் வாந்தியெடுத்தல் ஆகியன..

நோய் தடுக்கும் முயற்சிகளினால்  சால்மோனல்லாவின் பாதிப்பிலிருந்து தப்பிக்கலாம். 

அதற்கு முறையாக - 
சுகாதாரமாகத் 
 தயாரிக்கப்பட்ட  உணவு முறையைக் கடைபிடிக்க வேண்டும்.. 

சால்மோனெல்லா  சுகாதாரமற்ற உணவுகளால் ஏற்படுகின்றது.

சால்மோனெல்லா பாக்டீரியா நிணநீர் மண்டலத்தில் நுழைந்து ​​சால்மோனெல்லோசிஸ் எனும் வடிவத்தை ஏற்படுத்தும் போது டைஃபாய்டு காய்ச்சல் ஏற்படுகிறது..

ஹைலோக்சியா மற்றும் டோக்ஸிமியா ஆகியவற்றின் காரணமாக சிறுநீரக செயலிழப்பு ஏற்படுகிறது.  இவை பெரும்பாலும் மாசுபட்ட தண்ணீர் மாசுபட்ட உணவுகளில் காணப்படுகின்றன.  

சால்மோனெல்லா வைரஸ் ஏற்படுத்துகின்ற காய்ச்சலின் அறிகுறிகள்:

ஒரு மாதத்திற்கு மேலாக காய்ச்சல் நீடிக்கும். மிகவும் சோர்ந்த நிலை, வயிறு வலி, வயிறு உப்புதல்.
எடை குறைவு, வேகமாக மூச்சு விடுதல்..

மூட்டுகளிலும் தலையிலும் கடுமையான வலி, பசியின்மை.
குமட்டல், வாந்தி, வயிற்று வலி.

நோய்த் தடுப்பு, பாதுகாப்பு முறைகள் :

கைகளை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். அதிலும் கழிப்பறைக்குச் சென்று வந்த பிறகு கைகளை  சோப்பு போட்டு நன்றாகக் கழுவ வேண்டும்..

குடிநீர் பாதுகாப்பினை உறுதி செய்து கொள்ள வேண்டும்.. 

நோயாளர்கள் குடிநீரை
நன்கு கொதிக்க வைத்து ஆறிய பிறகே குடிக்க வேண்டும்..

காய்கறி மற்றும் பழங்களை நன்றாகக் கழுவிச் சுத்தப்படுத்திய பிறகே சமையலுக்கும் சாப்பிடவும் பயன்படுத்த வேண்டும். சமைத்த உணவுகள் இருக்கும் பாத்திரங்கள் நன்கு மூடப்பட்டிருக்க வேண்டும்.. திறந்து வைக்கக் கூடாது. 

உணவை - ஈக்கள் மொய்க்காமல் பாதுகாக்க வேண்டும். 

திறந்த வெளிகளில் ஈக்கள் மொய்க்கும் வகையில் தயாரிக்கப்படும் உணவுகளையும் விற்கப்படும் உணவுகளையும் சாப்பிடக் கூடாது..

எல்லாவற்றுக்கும் மேலாக சமைப்பவர் தனது தூய்மையில் நாட்டம் கொண்டவராக இருக்க வேண்டும்..

வீடுகளிலும் தெருக்களிலும் சுற்றுப்புறச் சுகாதாரம் காக்கப்பட வேண்டும்..

சால்மோனெல்லா  காய்ச்சலால் பாதிக்கப்பட்டவருக்கு அளிக்கப்பட வேண்டிய உணவுகள்:-

காரம் இல்லாத எளிதில் செரிக்க கூடிய உணவை மட்டுமே தரவேண்டும்.

பட்டினியாக இருக்கக் கூடாது. வயிற்றில் உணவு இருந்தால் மட்டுமே குடல் புண் சீக்கிரம் ஆறும்..

நீர் சத்து உடலில் குறையாமல் பார்த்து கொள்ள வேண்டும்..

மருத்துவர் பரிந்துரைக்கின்ற மருந்துகளை முறையாக எடுத்துக்
கொள்ள வேண்டும்.. இருப்பினும் காய்ச்சல் குறைந்த பின்னும் கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.

பொதுவாக, காலையில் புழுங்கல் அரிசிக் கஞ்சி மட்டும் (உப்பு குறைந்ததாக) எடுத்துக் கொள்வதும் 

மதிய வேளையில் 
காரம் புளிப்பு இல்லாத  
எளிய உணவும் -
இரவில் இட்லி இடியாப்பம் அமைவதும் நல்லது..

எந்த முறை மருத்துவம் ஆனாலும், தக்க மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது சிறப்பு..

குவைத் நாட்டில் சில வருடங்கள் உணவகப் பணியில் இருந்த போது அளிக்கப்பட்ட பயிற்சிகள் நினைவுக்கு வருகின்றன..

நம்முடைய நலம்
நம்முடைய கையில்

ஓம் நம சிவாய 
சிவாய நம ஓம்
***

6 கருத்துகள்:

  1. உபயோகமான குறிப்புகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..

      நன்றி ஸ்ரீராம்..

      நீக்கு
  2. நல்ல தகவல்கள் அனைவரும் தெரிந்திருக்கவேண்டும்.

    "உணவே மருந்து" என எங்கள் நலத்துக்கு ஏற்ற , வீட்டில் சமைத்த உணவுகளை உண்டு வாழ்வது சிறந்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..

      நன்றி மாதேவி..

      நீக்கு
  3. பயனுள்ள குறிப்புகள்.

    கீதா

    பதிலளிநீக்கு
  4. அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..

    நன்றி சகோ..

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..