நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
கார்த்திகை
திங்கட்கிழமை
நான்காவது சோமவாரம்
இன்று
திருஞானசம்பந்தர் அருளிச்செய்த திருக்கடைக்காப்பு
இரண்டாம் திருமுறை
திருப்பதிக எண் 40
திருப்பிரமபுரம் - சீர்காழி
எம்பிரான் எனக்கமுதம் ஆவானுந் தன்னடைந்தார்
தம்பிரான் ஆவானுந் தழலேந்து கையானுங்
கம்பமா கரியுரித்த காபாலி கறைக்கண்டன்
வம்புலாம் பொழிற்பிரம புரத்துறையும் வானவனே.. 1
தாமென்றும் மனந்தளராத் தகுதியரா உலகத்துக்
காமென்று சரண்புகுந்தார் தமைக்காக்குங் கருணையினான்
ஓமென்று மறைபயில்வார் பிரமபுரத் துறைகின்ற
காமன்தன் உடலெரியக் கனல்சேர்ந்த கண்ணானே.. 2
கண்ணுதலான் வெண்ணீற்றான் கமழ்சடையான் விடையேறி
பெண்ணிதமா முருவத்தான் பிஞ்ஞகன்பேர் பலவுடையான்
விண்ணுதலாத் தோன்றியசீர்ப் பிரமபுரந் தொழவிரும்பி
எண்ணுதலாஞ் செல்வத்தை யியல்பாக அறிந்தோமே.. 5
எங்கேனும் யாதாகிப் பிறந்திடினுந் தன்னடியார்க்
கிங்கேயென் றருள்புரியும் எம்பெருமான் எருதேறிக்
கொங்கேயு மலர்ச்சோலைக் குளிர்பிரம புரத்துறையுஞ்
சங்கேயொத் தொளிர்மேனிச் சங்கரன்தன் தன்மைகளே.. 6
தன்னடைந்தார்க் கின்பங்கள் தருவானைத் தத்துவனைக்
கன்னடைந்த மதிற்பிரம புரத்துறையுங் காவலனை
முன்னடைந்தான் சம்பந்தன் மொழிபத்தும் இவைவல்லார்
பொன்னடைந்தார் போகங்கள் பலவடைந்தார் புண்ணியரே.. 11
திருச்சிற்றம்பலம்
நன்றி
பன்னிரு திருமுறை
ஓம் சிவாய நம
**


நமச்சிவாய என்று சொல்வோம். நால்வகைத் துன்பத்தை வெல்வோம்.
பதிலளிநீக்குஅன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி
நீக்குநன்றி ஸ்ரீராம்
கார்த்திகை சோமவாரம் சிவனுக்கு சிறப்பான நாள் .பலரும் விரதம் இருப்பார்கள்.
பதிலளிநீக்குஎனது தாயாரும் இருந்தபோது விரதம் இருந்து சிவன்கோவில் சென்று வந்து மாலையில் மட்டும் பொங்கல் உண்பார்.
இந்த நன்னாளில் பாடல்பாடி வணங்கினோம்.
ஓம் சிவாய நமக.
அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி
நீக்குநன்றியம்மா