நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
மார்கழி 4
குறளமுதம்
வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல.. 4
அருளமுதம்
ஸ்ரீ ஆண்டாள் அருளிச் செய்த
திருப்பாவை
ஆழி மழைக்கண்ணா ஒன்று நீ கைகரவேல்
ஆழியுள் புக்கு முகந்துகொடு ஆர்த்தேறி
ஊழி முதல்வன் உருவம்போல் மெய்கறுத்து
பாழியந் தோளுடைப் பற்பநா பன்கையில்
ஆழிபோல் மின்னி வலம்புரிபோல் நின்றதிர்ந்து
தாழாதே சார்ங்கம் உதைத்த சரமழைபோல்
வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும்
மார்கழி நீராட மகிழ்ந்தேலோர் எம்பாவாய்.. 4
**
ஸ்ரீமாணிக்கவாசகர் அருளிச்செய்த திருப்பள்ளியெழுச்சி
இன்னிசை வீணையர் யாழினர் ஒருபால்
இருக்கொடு தோத்திரம் இயம்பினர் ஒருபால்
துன்னிய பிணைமலர்க் கையினர் ஒருபால்
தொழுகையர் அழுகையர் துவள்கையர் ஒருபால்
சென்னியில் அஞ்சலி கூப்பினர் ஒருபால்
திருப்பெருந் துறையுறை சிவபெரு மானே
என்னையும் ஆண்டுகொண் டின்னருள் புரியும்
எம்பெரு மான்பள்ளி எழுந்தரு ளாயே.. 4
**
ஸ்ரீ ஞானசம்பந்தர் அருளிச்செய்த
திருக்கடைக் காப்பு
திரு சாய்க்காடு
(சாயாவனம்)
நீநாளும் நன்னெஞ்சே
நினைகண்டாய் யாரறிவார்
சாநாளும் வாழ்நாளும்
சாய்க்காட்டெம் பெருமாற்கே
பூநாளுந் தலைசுமப்பப்
புகழ்நாமம் செவிகேட்ப
நாநாளும் நவின்றேத்தப்
பெறலாமே நல்வினையே. 3
நன்றி
பன்னிரு திருமுறை
இன்று
ஸ்ரீ ஹனுமத் ஜெயந்தி



அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
பதிலளிநீக்குநல்லதே நடக்கட்டும். ஓம் நம சிவாய...... ஹனுமத் ஜெயந்தி.... வீர தீர ஹனுமானுக்கி ஜெய்...
அன்பின் வருகையும் வாழ்த்துரையும் மகிழ்ச்சி
நீக்குநன்றி வெங்கட்
நமஸ்காரம் ஆஞ்சி... இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.
பதிலளிநீக்குநன்றி..
நீக்குமகிழ்ச்சி ஸ்ரீராம்
மார்கழி நான்காம் நாள் வாழ்த்துகள். ஊழிப் பெயரும் ஓர் புனல் வர இன்னும் எத்தனை யுகங்களோ... காக்க கண்ணன் வருவான்..
பதிலளிநீக்குஅன்பின் வருகையும் வாழ்த்துரையும் மகிழ்ச்சி
நீக்குநன்றி ஸ்ரீராம்
திருப்பெருந்துறையுறை சிவபெருமானே
பதிலளிநீக்குஉறுபிழை பொருத்தருள்வாய்
மறுமை வேண்டேன் - அன்பில்
வறுமை வேண்டேன் - என்பால்
பொறுமைகொண்டு - எனக்கும்
அதை போதித்து காத்தருள்வாய்
எம்பெருமானே
அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி
நீக்குநன்றி ஸ்ரீராம்