சனி, ஆகஸ்ட் 31, 2024

நாராயண நாராயண,


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஆவணி 15
சனிக்கிழமை


கங்கயிற் புனித மாய  காவிரி நடுவு பாட்டு
பொங்குநீர் பரந்து பாயும்  பூம்பொழி லரங்கந் தன்னுள்
எங்கள்மா லிறைவ னீசன்  கிடந்ததோர் கிடக்கை கண்டும்
எங்ஙனம் மறந்து வாழ்கேன் ஏழையே னேழை யேனே!.. 894


தாவியன் றுலக மெல்லாம்  தலைவிளாக் கொண்ட எந்தாய் 
சேவியே னுன்னை யல்லால் சிக்கெனச் செங்கண் மாலே
ஆவியே அமுதே என்றன் ஆருயிர் அனைய எந்தாய்
பாவியே னுன்னை யல்லால் பாவியேன் பாவி யேனே!..905
-: தொண்டரடிப்பொடியாழ்வார் :-

 நன்றி
நாலாயிரத் திவ்யப்ரபந்தம்

ஓம் ஹரி ஓம் 
***

4 கருத்துகள்:

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..