நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
**
இன்று
தை மூன்றாம் நாள்
காணும் பொங்கல்
![]() |
| நன்றி வெங்கடேஷ் ஆறுமுகம் |
பாதமணிக் கொலுசுக்குள்
பவளம் என மாறேனோ..
பாதமலர் அழகை எல்லாம்
பார்த்து மனம் ஆறேனோ!..
செங்காந்தள் கைகளிலே
செவ் வளையாய் மாறேனோ..
சிலுசிலுக்கும் வேளையிலே
செந்தமிழாய் வாரேனோ!..
காதோரம் கவி பாட
செவிப்பூவாய் மாறேனோ..
கரு மையாய்க் காத்திருந்து
கண்ணழகைப் பாரேனோ!..
பனிமுல்லைப் பூவாகி
பூங்குழலில் சேரேனோ..
செந்தூரத் துகளாகி
நெற்றியில் நான் வாழேனோ!..
கன்றாத தமிழெடுத்துக்
கனி மகளைப் பாடுகையில்
காற்றோடு ஊடாடி
காலம் அது திரும்பிடுதே..
திகட்டாத சொல்லெடுத்துத்
திருமகளைப் பாடுகையில்
தித்திக்கும் தெய்வநலம்
திசையெங்கும் பரவிடுதே!...
**
2023ல் பதிவிடப்பட்ட கவிதை
அனைவருக்கும்
அன்பின் நல்வாழ்த்துகள்
ஓம் ஹரி ஓம்
நம சிவாய
**





மீள் ,கவிதையை ரசித்தேன். நடுவில் வாத்யார் எங்கு, எதற்கு வந்தார் என்று புரியவில்லை.
பதிலளிநீக்குஅந்த வரியை நீக்கி விட்டேன்...
நீக்குஅன்பின் வருகைக்கு மகிழ்ச்சி..
நன்றி ஸ்ரீராம்
நன்றி. ஆனால் ஏன் அங்கு வந்தது என்று சொல்லி இருக்கலாமே!
நீக்குஇந்த வயதில் இப்படி எல்லாம் தேவையா என்பதற்காக போட்டது...
நீக்குவாத்யார் என்பது என்னைத் தான்...
மகிழ்ச்சி
நன்றி ஸ்ரீராம்
காலை வணக்கம். நல்லதே நடக்கட்டும்.
பதிலளிநீக்குநல்லதே நடக்கட்டும்.
நீக்குமகிழ்ச்சி
நன்றி வெங்கட்
காணும் பொங்கலை துரை செல்வராஜு சார், 'பெண்களைக் காணும் பொங்கல்' என்று அர்த்தப்படுத்திக்கொண்டு முதலிரண்டு படங்களைப் பகிர்ந்திருக்கிறாரோ?
பதிலளிநீக்குபண்டைய கிராமத்துப் பெண்களுக்கு இன்று தான் திருநாள்..
நீக்கு.
அதை நினைவில் கொண்டே இந்தப் பதிவு..
மகிழ்ச்சி நன்றி
கொலுசுக்குள் பவளம் என அடைந்துகிடந்தால் எப்படி அனுபவிப்பது?
பதிலளிநீக்குஉங்களுக்கு வயது குறைகிறதா இல்லை இளமைப் பருவ நினைவுகள் நடையாடுகிறதா? கவிதை சூப்பர்.
ஆனால் அந்தக் காலங்களை இப்போது நினைத்தால் சிரிப்புத்தான் வருகுது
கொலுசுக்குள் பவளம் என அடைந்து கிடந்தால் ஒலி இசை...
நீக்குஎல்லாம் இளமைக்கால நினைவுகள்...
மகிழ்ச்சி நன்றி
கவிதை நன்றாக இருக்கிறது.
பதிலளிநீக்குதெய்வ நலம் திசைஎங்கும் பரவட்டும்.
வாழ்க நலம்
நீக்கு.மகிழ்ச்சி நன்றியம்மா
கவிதையும் படங்களும் அழகு.
பதிலளிநீக்குகாணும் பொங்கல் வாழ்த்துகள்.
அன்பு என்னும் ஒளி மக்கள் மனங்களில் பரவி ஒளி தரட்டும்.
வாழ்க வளம்
நீக்கு.மகிழ்ச்சி நன்றியம்மா