நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஆடி 18
ஆடிப்பெருக்கு
ஞாயிற்றுக்கிழமை
அன்னை
காவிரிக்கு
அடியேனின் பாமாலை
தங்கி வளம் தழைத்திடவே
தங்க மகள் பெருகி வந்தாள்
மங்கலங்கள் செழித்திடவே
எங்கும் விளைவாகி வந்தாள்..
தமிழ் மூன்றும் தழைத்திடவே
தானுவந்து ஓடி வந்தாள்
அமிழ்தென்று மகிழ்ந்திடவே
ஆனந்தமாய் பாடி வந்தாள்..
மாவிலையும் தோரணமும்
பொலிந்திடவே வருக
மஞ்சளுடன் செங்கரும்பும்
துலங்கிடவே வருக..
பசுமை எங்கும் நிறைந்திட வருக
செழுமை இங்கே சிறந்திட வருக
பகையும் பிணியும் நீங்கிட வருக
பாரில் தமிழகம் ஓங்கிட வருக..
நீரின்றி அமையாத உலகம் தன்னில்
நின்புகழே எங்கும் துலங்கிட வேண்டும்
நெஞ்சார நின்னை நினைப்பவர் தம்மை
நீயே தாயாகி வாழ்த்திட வேண்டும்..
பெற்று வந்த வளங்களுடன்
நெல் மணிகள் நிறைவாகி
உற்ற பசி தீர்ந்திடவே
உன் பாதம் சரணம் அம்மா..
காவிரி போற்றுதும்
காவிரி போற்றுதும்..
ஆடிப் பெருக்கு
நல்வாழ்த்துகள்
ஓம் நம சிவாய நம ஓம்
**
இந்த முறை காவிரியில் தண்ணீர் போதுமான அளவு ஓடுகிறது போல... சந்தோஷம். ஆடிப்பெருக்கு வாழ்த்துகள்.
பதிலளிநீக்குகாவிரிப்பா அருமை. ரசித்தேன்.
பதிலளிநீக்குகாவிரி - காவேரி
பதிலளிநீக்குஎது சரி?
ஆடிப்பெருக்கு படங்களும் உங்கள் கவிதையும் அருமை.
பதிலளிநீக்குகாவிரி போற்றுதும் காவேரி போற்றுதும்.
அனைவருக்கும் ஆடிப்பெருக்கு
பதிலளிநீக்குநல்வாழ்த்துகள்.
பாமாலை அருமை.
காவேரி பெருகி வருவது படம் நிறைவுதருகிறது.
"தங்க மகள் பெருகி வந்தாள் " ...நாடும் மக்களும் நலன் பெற காவேரி தாயை வணங்கி நிற்கிறோம்.