நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
வைகாசி 29
வியாழக்கிழமை
ஞானசம்பந்தப் பெருமானின் குருபூஜை நாள்..
தனக்கு நிச்சயிக்கப்பட்ட
தோத்திர பூர்ணாம்பிகை எனும் மங்கை நல்லாளுடன் மணவேளையில் யாக அக்னியில் சிவ சாயுஜ்யம் அடைந்தார்..
ஸ்வாமிகளுடன் தாய் தந்தையர் முருக நாயனார் திருநீலகண்ட யாழ்ப்பாணர் அவரது துணைவியார் மதங்க சூளாமணி ஏனையோரும் சிவமுக்தி எய்தினர்..
அருளாளர் நால்வருள் முதலாமவராகத் திகழ்பவர் ஞானசம்பந்தப் பெருமான்..
இறைவனை அடைவதில்
சத்புத்திர மார்க்கத்திற்கு வழி காட்டியவர்..
அருளிச் செய்த திருப்பதிகங்கள் 16000.. நமக்குக்
கிடைத்திருப்பவை 384..
இவற்றுள் முத்து ரத்னம் வைர வைடூரியம் என ஏராளம்..
அப்பொக்கிஷத்தில் இருந்து
தங்கத் தட்டில் நவ ரத்தினங்களை வைத்தாற்போல இன்றைக்கு சில திருப்பாடல்கள்...
எனது நித்ய பிரார்த்தனையில் உள்ள திருப்பாடல்களும் இவற்றுள் உள்ளன...
தோடுடைய செவியன் விடை
யேறியோர் தூவெண்மதி சூடிக்
காடுடைய சுடலைப் பொடிபூசி
என்உள்ளங்கவர் கள்வன்
ஏடுடைய மலரால் முனைநாட் பணிந்
தேத்த அருள் செய்த
பீடுடைய பிர மாபுரம் மேவிய
பெம்மான் இவ னன்றே..1/1/1
செல்வ நெடுமாடஞ் சென்று சேண்ஓங்கிச்
செல்வ மதிதோயச் செல்வம் உயர்கின்ற
செல்வர் வாழ்தில்லைச் சிற்றம் பலமேய
செல்வன் கழலேத்துஞ் செல்வஞ் செல்வமே. 1/80/5
நன்றுடையானைத் தீயதிலானை நரைவெள்ளேறு
ஒன்றுடையானை உமையொருபாகம் உடையானைச்
சென்றடையாத திருவுடையானைச் சிராப்பள்ளிக்
குன்றுடையானைக் கூறஎன்னுள்ளங் குளிரும்மே. 1/98/1
எங்கேனும் யாதாகிப்
பிறந்திடினுந் தன்னடியார்க்
கிங்கேயென் றருள்புரியும்
எம்பெருமான் எருதேறிக்
கொங்கேயும் மலர்ச்சோலைக்
குளிர்பிரம புரத்துறையுஞ்
சங்கேயொத் தொளிர்மேனிச்
சங்கரன் தன் தன்மைகளே. 2/40/6
மந்திரம் ஆவது நீறு
வானவர் மேலது நீறு
சுந்தரம் ஆவது நீறு
துதிக்கப் படுவது நீறு
தந்திரம் ஆவது நீறு
சமயத்தில் உள்ளது நீறு
செந்துவர் வாய் உமை பங்கன்
திருஆல வாயான் திருநீறே. 2/66/1
என்ன புண்ணியஞ் செய்தனை
நெஞ்சமே இருங்கடல் வையத்து
முன்னம் நீபுரி நல்வினைப்
பயனிடை முழுமணித் தரளங்கள்
மன்னு காவிரி சூழ்திரு
வலஞ்சுழி வாணனை வாயாரப்
பன்னி ஆதரித்து ஏத்தியும்
பாடியும் வழிபடும் அதனாலே. 2/106/1
மருந்துவேண் டில் இவை
மந்திரங் கள் இவை
புரிந்துகேட் கப்படும்
புண்ணியங் கள் இவை
திருந்துதே வன்குடித்
தேவர்தே வெய்திய
அருந்தவத் தோர்தொழும்
அடிகள்வே டங்களே. 3/25/1
மங்கையர்க் கரசி வளவர்கோன் பாவை
வரிவளைக் கைம்மட மானி
பங்கயச் செல்வி பாண்டிமா தேவி
பணிசெய்து நாடொறும் பரவப்
பொங்கழல் உருவன் பூதநாயகன் நால்
வேதமும் பொருள்களும் அருளி
அங்கயற் கண்ணி தன்னொடும் அமர்ந்த
ஆலவாய் ஆவதும் இதுவே. 3/120/1
வேயுறு தோளிபங்கன் விடமுண்டகண்டன் மிகநல்ல வீணை தடவி
மாசறு திங்கள் கங்கை முடிமேல் அணிந்தென் உளமே புகுந்த அதனால்
ஞாயிறு திங்கள்செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி சனி பாம் பிரண்டும் உடனே
ஆசறுநல்லநல்ல அவைநல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே.. 2/85/1
வாழ்க அந்தணர் வானவர் ஆனினம்
வீழ்க தண்புனல் வேந்தனும் ஓங்குக
ஆழ்க தீயது எல்லாம் அரன் நாமமே
சூழ்க வையகமும் துயர் தீர்கவே.. 3/54/1
திருச்சிற்றம்பலம்
சிவாய நம ஓம்
**
ஞானசம்பந்தப்பெருமான் போற்றிப் பாடிய சிவபெருமான் நம்மை எல்லாம் காக்க, பணிகிறேன்.
பதிலளிநீக்குதங்கள் அன்பின் வருகையும் மகிழ்வான
நீக்குகருத்தும் மகிழ்ச்சி..
நன்றி ஸ்ரீராம்
வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குபதிவு அருமை. படங்களும், பாடல்களும் சிறப்பு. திருஞானசம்பந்தரின் வரலாறும், பாடல்களும், அவரின் பக்தியும் மெய்சிலிர்க்க வைத்தது. அவரின் பாதம் பற்றி போற்றிப் பணிவோம். அடியவரை போற்றி தொழுதால் என்னை தொழுத மாதிரிதான் என ஈசனும் மகிழ்வார்.
சிவாய நம ஓம். 🙏.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
தங்கள் அன்பின் வருகையும் மகிழ்வான
நீக்குகருத்தும் மகிழ்ச்சி..
நன்றியம்மா
திருஞானசம்பந்தர் பாடல்கள் ஆனி மூலநாளில் நினைவுகொண்டு பகிர்ந்துள்ளீர்கள்.
பதிலளிநீக்குபாடி வணங்கினோம். நன்றி.
தங்கள் அன்பின் வருகையும் மகிழ்வான
நீக்குகருத்தும் மகிழ்ச்சி..
நன்றி மாதேவி