நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
சித்திரை 25
வியாழக்கிழமை
நேற்று
தஞ்சையில்
திருத்தேரோட்டம்
ராஜ வீதிகளின் கோயில்கள் அனைத்திலும் வாழை மரம் தோரணங்கள்...
நகரின் பல பகுதுகளிலும் அன்ன தானங்கள் நிகழ்ந்தன..
இதற்கு மேல் பெருங் கூட்டத்தினுள் உள்வாங்கிச் சென்று படம் எடுப்பதற்கு எனது உடல் நிலை ஒத்துழைக்கவில்லை..
ஓம் சிவாய நம
இன்று
மதுரையம்பதியில்
ஸ்ரீ மீனாக்ஷி திருக்கல்யாணம்
சுரும்பு முரல் கடிமலர்ப்பூம் குழல் போற்றி உத்தரியத் தொடித் தோள் போற்றி
கரும் புருவச் சிலை போற்றி கவுணியர்க்குப் பால் சுரந்த கலசம் போற்றி
இரும்பு மனம் குழைத்தென்னை எடுத்தாண்ட அங்கயற் கண் எம்பிராட்டி
அரும்பும் இளநகை போற்றி ஆரண நூபுரம் சிலம்பும் அடிகள் போற்றி. 5
- திருவிளையாடற் புராணம் -
வண்டுகள் ஒலிக்கின்ற,
நறுமண மிகும் பூங்குழல் போற்றி..
மேலாடையும்
தோள் வளையங்களும்
திகழ்கின்ற - திருத்தோள்கள் போற்றி..
வில் போல் கறுத்திருக்கும் புருவங்கள் போற்றி..
ஞானசம்பந்தருக்கு பால் சுரந்த திருத்தனங்கள் போற்றி..
இரும்பு போலக் கிடந்த எனது மனதைக் குழைத்து
அடியேன் பிறவிக் கடலுள் அழுந்தா வகைக்கு எடுத்தாண்ட
எம்பிராட்டி
அங்கயற்கண்ணியின் இளநகை போற்றி..
வேதங்களாகிய சிலம்புகள் ஒலிக்கின்ற
திருவடிகள் போற்றி.. போற்றி..
**
நன்றி தமிழ் இணையம்
ஓம் மீனாக்ஷி சுந்தரேஸ்வராயை நம
**
தஞ்சை தேர்... மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம்... சிறப்பு.
பதிலளிநீக்குதங்கள் அன்பின் வருகையும்
நீக்குகருத்துரையும் மகிழ்ச்சி..
நன்றி ஸ்ரீராம்
தஞ்சையில் இருந்திருக்கிறேன், ஒதுக்குப்புறமாக... இந்த திருவிழாவெல்லாம் பார்த்ததில்லை. மதுரை சித்திரைத் திருவிழாவில் மூழ்கி களித்திருக்கிறேன்.
பதிலளிநீக்கு2015 ல் தான் திருத்தேர் மீண்டும் புதிதாக வடிவமைக்கப்பட்டது...
நீக்குநமது பால்யத்தில் தேர் இங்கே இல்லை..
தங்கள் அன்பின் வருகையும்
கருத்துரையும் மகிழ்ச்சி..
நன்றி ஸ்ரீராம்
தஞ்சை தேர்த்திருவிழா படங்கள் அருமை கண்டு வணங்கினோம். முளைப்பாரி அழகாக வளர்ந்துள்ளது.
பதிலளிநீக்குமீனாட்சி திருக்கல்யாணம் அருமை.
ஓம் சிவாய நமக.
தங்கள் அன்பின் வருகையும்
நீக்குகருத்துரையும் மகிழ்ச்சி..
நன்றி மாதேவி
தஞ்சை தேர்த்திருவிழா படங்கள், மற்றும் முளைப்பாறி , என்ன விற்கிறார்கள் சைக்கிளில் ? தாழம்பூ போலவும் இருக்கிறது.
பதிலளிநீக்குபாடல்களை பாடி அம்மனை வணங்கி கொண்டேன்.
தங்கள் அன்பின் வருகையும்
நீக்குகருத்துரையும் மகிழ்ச்சி..
நன்றியம்மா