நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
சித்திரை
வெள்ளிக்கிழமை
திருப்புகழ்
கதிர்காமம்
தனதனா தத்த தனதனா தத்த
தனதனா தத்த ... தனதான
மருவறா வெற்றி மலர்தொடா விற்கை
வலிசெயா நிற்கு ... மதனாலும்
மதில்கள்தா வுற்ற கலைபடா வட்ட
மதிசுடா நிற்கு ... மதனாலும்
இருகணால் முத்த முதிரயா மத்தி
னிரவினால் நித்த ... மெலியாதே
இடருறா மெத்த மயல்கொளா நிற்கு
மிவளைவாழ் விக்க ... வரவேணும்
கரிகள்சேர் வெற்பி லரியவே டிச்சி
கலவிகூர் சித்ர ... மணிமார்பா
கனகமா ணிக்க வடிவனே மிக்க
கதிரகா மத்தி ... லுறைவோனே
முருகனே பத்த ரருகனே முத்தி
முதல்வனே பச்சை ... மயில்வீரா
முடுகிமே லிட்ட கொடியசூர் கெட்டு
முறியவேல் தொட்ட ... பெருமாளே..
-: அருணகிரிநாதர் :-
நன்றி
கௌமாரம்
இரண்டு, மூன்று நாட்களாக வெளியூர் அலைச்சல்.
மற்றபடி பூரண நலமே..
மற்றபடி பூரண நலமே..
முருகா முருகா
முருகா முருகா
***

ஓம் முருகா... வெளியூர்ப் பயணங்கள், அலைச்சல்கள் நிறைவடைந்தனவா?
பதிலளிநீக்குபயணங்கள் முடிவதில்லை...
நீக்குமகிழ்ச்சி
நன்றி ஸ்ரீராம்
அனைவருக்கும் இனிய காலை வணக்கம். நல்லதே நடக்கட்டும்.
பதிலளிநீக்குஇன்றைய நாள் திருப்புகழுடன் தொடங்கி இருக்கிறது. அனைவருக்கும் முருகப் பெருமானின் பூரண அருள் கிடைத்திட எனது பிரார்த்தனைகள்.
நல்லதே நடக்கட்டும்..
நீக்குமகிழ்ச்சி
நன்றி வெங்கட்
திருப்புகழ் பாடி வணங்கினோம். கதிர்காமக் கந்தன் பாடல் பகிர்வு அருமை.
பதிலளிநீக்குஅனைவர் நலனையும் கந்தன் காக்கட்டும் .
ஓம் முருகா சரணம்.
முருகா சரணம்..
நீக்குமகிழ்ச்சி
நன்றியம்மா..
திருப்புகழ் பாடி முருகனை வணங்கி கொண்டேன்.
பதிலளிநீக்குகந்தா சரணம்..
நீக்குமகிழ்ச்சி
நன்றியம்மா..
திருப்புகழ் நன்று. சண்முகனை வணங்கிக்கொண்டேன்.
பதிலளிநீக்குநெல்லை அவர்களுக்கு நன்றி.
நீக்கு