நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
வைகாசி 19
திங்கட்கிழமை
இன்று
பொரி அரிசி தோசை
தேவையான பொருட்கள்
புழுங்கல் அரிசி 200 g
ரவை 200 g
பொட்டுக்கடலை 1000 g
இஞ்சி சிறிதளவு
சீரகம் ஒரு tsp
கல் உப்பு தேவையான அளவு
தயிர் ஒரு tsp
பச்சை மிளகாய் 2
கறிவேப்பிலை ஒரு இணுக்கு
கொத்தமல்லி சிறிதளவு
நெய் தேவைக்கு
செய்முறை
முதலில் வாணலி ஒன்றை
மிதமான சூட்டில் வைத்து அரிசியை கருகி விடாமல் பொரித்து ஆறியதும் கொர கொரப்பாக அரைத்துக் கொள்ளவும்..
அடுத்து பொட்டுக் கடலையையும் இதே போல அரைத்துக் கொள்ளவும்..
அடுத்து ரவையை ஓரளவுக்கு சிவக்க வறுத்துக் கொள்ளவும்..
இஞ்சியை சுத்தம் செய்து மெல்லியதாக நறுக்கிக் கொள்ளவும்..
பச்சை மிளகாய் கறிவேப்பிலை, கொத்த மல்லியையும் சன்னமாக நறுக்கிக் கொள்ளவும்..
பாத்திரம் ஒன்றில் அரிசிப் பொரி மாவு பொட்டுக் கடலை மாவு ரவை, .இஞ்சி சீரகம், தயிர் மற்றும் உப்பு சேர்த்து சிறிதளவு தண்ணீர் ஊற்றி நன்கு மென்மையாக கரைத்துக் கொள்ள வேண்டும்.
கரைத்த மாவில் பொடியாக நறுக்கிய மிளகாய் கறிவேப்பிலை, கொத்த மல்லியையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
தோசைக் கல்லை அடுப்பில் வைத்து சூடானதும், கலந்து வைத்துள்ள மாவை மெல்லிய தோசைகளாக ஊற்றவும்.
ஓரத்தில் சிறிது நெய் விட்டு வேக வைத்து எடுத்தால் பொரி அரிசி தோசை..
மிளகாய் தாசர்கள் தவிர்த்து மற்றவர்கள் மிளகுத் தூள் சேர்த்துக் கொள்வது நலம்.
மொர மொரப்பாக இருக்குமா?..
அதெல்லாம் உங்கள் கைப்பக்குவம்!..
உங்களது
தேவைக்கேற்ப அளவுகளை மாற்றிக் கொள்ளலாம்..
நமது சமையல்
நமது ஆரோக்கியம்
சிவாய நம ஓம்
**
பொரி அரிசி தோசை பார்க்க நன்றாக இருக்கிறது. சுவையிலும் குறை இருக்காது என்று தெரியும்.
பதிலளிநீக்குதங்கள் அன்பின் வருகையும்
நீக்குகருத்தும் மகிழ்ச்சி..
நன்றி ஸ்ரீராம்
வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குபதிவு அருமை. பொரி அரிசி தோசை நல்ல பக்குவமான செய்முறை குறிப்புகளோடு நன்றாக உள்ளது. இதில் புழுங்கல் அரிசி என்பதால் சற்று நேரம் மாவை ஊற வைக்க வேண்டுமா? இல்லை கோதுமை மா கரைத்த தோசை போல உடனடியாக தோசை வார்த்து விடலாமா? படிக்கும் போதே தோசையின் பக்குவம் மனதுக்கு நன்றாக உள்ளது.
நான் கோதுமை மாவு தோசையில் சீரகம், மிளகு பொடி இரண்டையும் சேர்த்துதான் செய்வேன்.
மிளகை முழுதாக போட்டால் அதை அனைவரும் ஒதுக்கி வைத்து விடுவார்கள் அல்லவா? அதனால், பொங்கலிலும், மிளகைத் தூளாக்கி வறுத்து சேர்த்து விடுவேன். இப்படி அவ்வப்போது மிளகு உடலில் சேர்ந்தால் நல்லதுதானே!
தங்கள் பொரி தோசை செய்முறை நன்றாக உள்ளது. ஒரு நாள் இப்படி செய்து பார்க்கும் ஆவலை உண்டாக்குகிறது. பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
/// புழுங்கல் அரிசி என்பதால் சற்று நேரம் மாவை ஊற வைக்க வேண்டுமா?.. ///
நீக்குதேவையில்லை.. எனினும் விருப்பம் போலச் செய்யலாம்
தங்கள் அன்பின் வருகையும்
கருத்தும் மேல் விவரங்களும்
மகிழ்ச்சி..
நன்றியம்மா
பொரி அரிசி தோசை செய்முறை அழகாக தந்துள்ளீர்கள். நன்றாகவும் உள்ளது.
பதிலளிநீக்குதங்கள் அன்பின் வருகையும்
நீக்குகருத்தும் மகிழ்ச்சி..
நன்றி மாதேவி