நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
சித்திரை 14
ஞாயிற்றுக்கிழமை
அன்பின் ஸ்ரீராம் அவர்கள் விருப்பத்திற்காக இந்தப் பதிவும் அடுத்து சில பதிவுகளும்..
தமிழுக்கும் தமிழ் மண்ணிற்கும் தன்னையே தந்த மரம் எனில் அது கற்பகத் தரு எனப்படும் பனை மரம் ஆகும்..
பனை ஓலைகள் வழியாகத் தான் காலங்களையும்
கடல்களையும் கடந்து நிலைத்திருக்கின்றது - தமிழ்..
வலம்புரத் திருப்பதிகத்தில் ஸ்ரீ சுந்தர மூர்த்தி ஸ்வாமிகளால் பல முறை புகழப்பட்டிருக்கின்ற மரம்..
பனைமரம் உண்ணுகின்ற வகைக்கு வழங்குவதோடு
மிகுந்த அளவில் உறைவிடப் பொருள்களையும் வழங்குகின்றது.
உணவுப் பொருள்களில்
பதநீர் முதன்மையானது. இதுவே கருப்பட்டி, பனை வெல்லம், , பனங்கற்கண்டு, எனப் பல்வேறு உணவுப் பொருள்களாக வடிவம் பெறுகிறது.
பனங்கிழங்கு இயற்கையின் அற்புதம்..
பனை மட்டைகள்
ஓலைகள்
பனந்தும்பு எனும் கயிறுவகைகள், சப்பைகள் என்றாகின்றன..
பனையின் ஓலைகளில் இருந்து விசிறி கூடை மற்றும் ஓலைப் பொருள்கள், ஆகியன பனையிலிருந்து பெறப்படும் கொடைகளாகும்..
வறண்ட நிலத்தில் வளர்ந்தாலும் பனையானது தனது சல்லி வேர்களுக்குக் கீழே நீரை ஈர்த்து தக்க வைத்துக் கொள்கின்ற இயல்பின் உடையது...
இதனாலேயே பனை மரத்தடியில் சிறு செடிகள் தழைத்து பனையின் இளங்கன்றும் முளைத்திருக்கும்..
ஆய்வுகளின் படி ஒரு பனை மரமானது ஓராண்டில் சராசரியாக நூற்றைம்பது லிட்டர் பதநீர் தருகின்றதாகவும் அதிலிருந்து இருபத்தைந்து கிலோ பனை வெல்லம் பெற முடியும் எனவும் கணக்கிடப்பட்டு உள்ளது..
2016 கணக்கெடுப்பின் படி
தமிழ் நாட்டில் மட்டும் ஐந்து கோடி பனை மரங்கள். இவற்றுள் 50 சதவீத மரங்கள்
திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, இராமநாதபுரம்
மாவட்டங்களில்..
தஞ்சை மாவட்டத்தின் கடற்கரை கிராமங்களில் பனை மரங்கள் மிகுந்துள்ளன..
தற்போதைய நிலை என்ன என்று தெரியவில்லை..
விவசாயம், கைத்தறிக்கு அடுத்தபடியாக அதிக வேலை வாய்ப்பினைக் கொண்டதாக பனைத் தொழில் விளங்குகின்றது..
இயற்கையின் கொடைகளில் பனையும் முருங்கையுமே ரசாயனங்களில் இருந்து தப்பித்து இருக்கின்றன..
முருங்கை வருடத்திற்கு இருமுறை பலன் தருகின்றது.. பனையோ ஒருமுறை தான்..
தென் மாவட்டங்களில் பனங்காட்டுக்குள் இருக்கின்ற மாடசாமி கோயில்களில் நள்ளிரவு வழிபாட்டில் படையலிடப்படும் அன்னம் பொழுது விடிந்ததும் படைப்பு சோறாக வழங்கப்படும்...
எவ்விதப் பாகுபாடும் இன்றி பனை மட்டைகளிலும் பனை ஓலைப் பெட்டிகளிலும் மக்கள் வாங்கிச் செல்வர்...
நாங்களும் அவ்விதம் வாங்கி இருக்கின்றோம்..
தென் மாவட்டங்களில் சற்றேறக்குறைய ஐந்தரை லடசம் பேருக்கு வாழ்வளிக்கின்றது பனை..
இருப்பினும் பெரும்பாலான பனைத் தொழிலாளர்கள் வறுமையின் பிடியில் தான் வாழ்கின்றார்கள்..
காரணம் -
கோடையில் மட்டுமே பலன் தருகின்றது பனை...
அவர்கள் சுபிட்சமாக வாழ்வதற்கு
பனையடி சாஸ்தாவும் ஒற்றைப் பனை மாடசாமியும் தான் வழி காட்ட வேண்டும்..
ஓம் நம சிவாய
சிவாய நம ஓம்
**
நன்றி என் வேண்டுகோளுக்கிணங்கி சில பதிவுகள் வெளியிடுவதற்கு.
பதிலளிநீக்குதங்கள் அன்பின் வருகையும் கருத்தும்
நீக்குமகிழ்ச்சி..
நன்றி ஸ்ரீராம்
பனையின் பயன்கள் ஏராளம் என்பதை அறிவோம். பதநீர் இந்தப் பதத்தில் குடிக்கலாம், சுண்ணாம்பு சேர்த்தா, சேர்க்காமலா, என்று சொல்வீர்கள் என்று பார்த்தேன்!
பதிலளிநீக்குவர இருக்கின்ற பதிவில் காணலாம்
நீக்குபனை ஓலையில் காத்தாடி கூட செய்வார்கள்!
பதிலளிநீக்குஆகா...
நீக்குமகிழ்ச்சி நன்றி ஸ்ரீராம்
கற்பகதரு பனையின் பயன்கள் நன்றாக எடுத்துக் கூறியுள்ளீர்கள்.
பதிலளிநீக்குஅந்தக்காலம் ஏழைகளின் பசிபோக்கும் பிரதான உணவாகவும் பனம் உணவுகள் இருந்திருக்கின்றன..
நீங்கள் சொன்னதுபோல பனை அரிச்சுவடிகள் நீண்டகாலப் பாவனைக்கு உகந்தவையாக காலத்தால் அழியாதவையாக இருந்தன.
தங்கள் அன்பின் வருகையும் கருத்தும்
நீக்குமகிழ்ச்சி..
நன்றி மாதேவி
பனை ஓலைப் பெட்டி, சுளகு, பிட்டு அவிக்கும் நீத்துப்பெட்டி, விசிறி, டேபிள் மற்ஸ் எங்கள் வீட்டு பாவனையில் இன்றும் உள்ளது.
பதிலளிநீக்குபேரன் ஓலை பொருட்களில் செய்த விளையாட்டுப் பொருட்கள் வைத்து விளையாடுவார்.
கற்பகதரு வளர்க வாழ்க!
தங்கள் அன்பின் வருகையும் கருத்தும்
நீக்குமேல் விவரங்களும்
மகிழ்ச்சி..
நன்றி மாதேவி
அருமையான பதிவு.
பதிலளிநீக்குபள்ளி பருவத்தில் பனைமரபாட்டு படித்தது நினைவுகளில்.
பனபழம், பனகிழங்கு, நுங்கு, என்று முன்பு அடிக்கடி சாப்பிடுவோம்.
இப்போது பனகிழங்கு ஒத்துக் கொள்வது இல்லை.
நுங்கு வெளியில் போனால் தான் வாங்க முடியும் எங்கும் போவது இல்லை அதனால் நுங்கு வாங்குவது இல்லை.
கோடைக்கு பனை ஓலையில் செய்த விசிறி நன்றாக இருக்கும். சித்திரை திருவிழாவிற்கு விசிறி தானம் கொடுப்பார்கள்.
தங்கள் அன்பின் வருகையும் கருத்தும்
நீக்குமேல் விவரங்களும்
மகிழ்ச்சி..
நன்றியம்மா